Wednesday, 1 January 2014

ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி மகோத்ஸவம்

01-01-2014_ திருவையாறு  பாவாசாமி அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் 34 ஆம் ஆண்டு ஸ்ரீ  ஹனுமத் ஜெயந்தி மகோத்ஸவம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.23-12-2013 அன்று துவஜாரோகணத்துடன் உத்ஸவம் துவங்கியது. அதைத் தொடர்ந்து 31-12-2013 ஆம் தேதி வரை தினசரி ஸ்ரீ ஆஞ்சநேயர் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார்.  ஹனுமத் ஜெயந்தி நாளான இன்று இரவு ஸ்ரீ ஆஞ்சநேயர் நன்கு அலங்கரிக்கப்பட்ட மின்சார ரதத்தில் பவனி வந்தார். நாளை  02-01-2014    
    
 பஞ்சமுகார்ச்சனையுடன் விழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை  
 பரம்பரை  டிரஸ்டி  எஸ்.குருமூர்த்தி    அவர்கள் செய்திருந்தார்.

வெள்ளி ரிஷப வாகனத்தில் ஐயாறப்பர் வீதியுலா

01-01-2014​​ _ அமாவாசையை முன்னிட்டு அறம்வளர்த்தநாயகி உடன்  ஸ்ரீ  ஐயாறப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில்  மதியம் காவிரியில்
தீர்த்தவாரி முடித்து நான்கு முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தார்.

Opening today 01-01-2014

அனைவருக்கும் வணக்கம்.2014 ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான           ( 01-01-2014 ) இன்று முதல் திருவையாறு செய்திகள் என்ற புதிய இணைய செய்திப் பத்திரிக்கை தொடங்கப் பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.இணையத்தில் இணைந்துள்ள அனைவரும் திருவையாறு பகுதி செய்திகளைத் தெரிந்துகொள்ள உதவியாக அமையும் என நம்புகிறோம்.இப்பகுதிக்குத் தகவல் தெரிவிக்க விரும்புவோர் 
thiruvaiyarunews@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் 
தொடர்புகொள்ள வேண்டுகிறோம். 

                      இப்படிக்கு

                 பொறுப்பாசிரியர்
           திருவையாறு செய்திகள் 

இது  பற்றிய தங்களது கருத்துகளை  வரவேற்கிறோம்.